விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மும்பை நபர் கைது: வலைதளம், கிரெடிட்கார்டு பயன்படுத்திய போது போலீசில் சிக்கினார்..!!

டெல்லி: விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். நியூயார்க்கிலிருந்து  டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கடந்த நவம்பர் மாதம்  பயணித்த சங்கர் மிஸ்ரா சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்திருக்கிறார். இதுகுறித்து அந்த பெண் புகார் அளித்த நிலையில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தனர். மேலும் அவரை காணவில்லை என்று லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் தலைமறைவாகியிருந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்து, தலைநகர் அழைத்து சென்றனர். அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருந்ததும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தியதை வைத்து போலீசார் சங்கர் மிஸ்ரா இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். பெண் இடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக அவர் பணியாற்றிய அமெரிக்க நிறுவனம். அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் வணிக பிரிவின் துணைத் தலைவராக மிஸ்ரா பணியாற்றி வந்தார்.    

Related Stories: