மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷப் பன்டை நடிகை சந்தித்தாரா?..அடுத்தடுத்த பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

மும்பை: மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷப் பன்டை நடிகை ஊர்வசி ராவ்டேலா சந்தித்தாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 30ம் தேதி உத்தரகாண்டில் நடந்த சாலை விபத்தில் சிக்கி  படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட், டேராடூனில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நடிகர்கள் அனுபம் கெர், அனில்  கபூர் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே ரிஷப் பன்டின்  காதலியும், நடிகையுமான ஊர்வசி ராவ்டேலா, தனது சமூக வலைதள பக்கத்தில்  ‘பிரார்த்தனை’ என்ற தலைப்பில் ‘உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்’ என்று  ரிஷப் பன்டின் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தார். ஆனால், இருவரும் காதலிக்கின்றனரா? என்பது இன்னமும் சஸ்பென்சாக இருந்து வருகிறது. இந்நிலையில் டேராடூனில் அனுமதிக்கப்பட்ட ரிஷப் பன்ட், மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது மும்பையில் இருக்கும் ஊர்வசி ராவ்டேலா, ரிஷப் பன்ட் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனால் அவர் மருத்துவமனையில் ரிஷப் பன்டை சந்தித்தாரா? என்ற கேள்வியும் எழுந்தது. மருத்துவமனையின் வெளி வளாகத்தை மட்டுமே அவர் பதிவிட்டிருந்ததால், அவர் ரிஷப் பன்டை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: