புவனேஸ்வர்: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி தொலை தொடர்பு சேவை வரும் ஆண்டு ஏப்ரல் முதல் தொடங்கும் என மத்திய தோலை தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024 ஏப்ரல் முதல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை தொடங்கும் எனவும் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு TCS மற்றும் C-DOT ஆகியவற்றுடன் கூட்டமைப்பு மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றே மாதங்களில் மிகப்பெரிய பரப்பளவில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.