வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவான இன்போ பார்க்கில் வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கடும் அவதியடைந்தனர்.
கனமழையால் ஒரே நாளில் 5 பேர் பலியாகினர். திருவனந்தபுரம் அருகே முதலப்பொழியில் கடலில் படகு மூழ்கியதில் ஆபிரகாம் என்ற மீனவர் உயிரிழந்தார். காசர்கோடு, எர்ணாகுளத்தில் தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். ஆலப்புழா அருகே உள்ள மாவேலிக்கரையில் வீட்டு முன் நின்று கொண்டிருந்த அரவிந்த் (28) என்பவரின் மீது தென்னை மரம் விழுந்ததில் உயிரிழந்தார். திருச்சூர் அருகே கொடுங்கல்லூரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவ ன் உடல் நேற்று மீட்கப்பட்டது.
The post ஒன்றரை மணி நேரத்தில் 10 செ.மீ கொட்டியது கொச்சியில் மேக வெடிப்பு: கேரளாவில் கன மழைக்கு ஒரே நாளில் 5 பேர் பலி appeared first on Dinakaran.