உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு, அவசரகால வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அவசரகால சறுக்கு பாதை வழியாக விமானி விமானத்தில் இருந்து சறுக்கி வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தை பரிசோதித்ததில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து காலை 11.10 மணி அளவில் விமானம் வாரணாசிக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் சில மணி நேரம் பீதி நிலவியது.
The post டெல்லி ஏர்போர்ட்டில் பீதி வாரணாசி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரகால வழியில் பயணிகள் வெளியேற்றம் appeared first on Dinakaran.