பாங்காங்: மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு ராணுவ ஆட்சி நடந்து வருகின்றது. இதனைதொடர்ந்து முன்னாள் அரசு ஆலோசகரான ஆங் சான் சூகி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதில் அவருக்கு ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.