கோலாப்பூர், : பவுன்சர்கள் தாக்கிய சம்பவத்தில் செய்தியாளர்களிடம் நடிகை ஜெனிலியா மன்னிப்பு கேட்டார். ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக், மராத்தியில் வேத் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் அவரும் ஜெனிலியாவும் சேர்ந்து நடித்துள்ளனர். வரும் 30ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி சிறப்பு பூஜை செய்ய மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூர் பஞ்சகங்காவில் அமைந்துள்ள மகாலட்சுமி கோயிலுக்கு தம்பதி சென்றனர். ஜெனிலியா வந்திருப்பதை அறிந்து, செய்தியாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் அங்கு கூடிவிட்டனர். கோயிலுக்குள் செல்ல முடியாதபடி ஜெனிலியாவின் பவுன்சர்கள் செய்தியாளர்களை தடுத்தனர்.