வாட்ஸ்அப் குழு அமைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் கைது: 3 இளம்பெண்கள் மீட்பு

சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் புரோக்கர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கம் சாரதா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆண்கள் அதிகளவில் வந்து செல்வதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் அந்த குடியிருப்பை ரகசியமாக கண்காணித்தபோது, 2வது மாடியில் உள்ள வீட்டில், இளம்பெண்கள் வைத்து பாலியல் தொழில் செய்வது தெரிந்தது.

உடனே போலீசார் அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை செய்தபோது, ராயபுரம் தொப்பை தெருவை சேர்ந்த பெண் புரோக்கர் இம்மாகுலேட் மேரி (38) எனபவர் 3 இளம்பெண்களை வைத்து, வாட்ஸ்அப் குழு மூலம் பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, இம்மாகுலேட் மேரி மற்றும் விருகம்பாக்கம் சாரதா நகரை சேர்ந்த கல்யாணகுமார் (45) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டு, 3 செல்போன்கள் மற்றும் ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: