குளத்தூர்: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேம்பார் கடலோர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெரியசாமிபுரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட உள்ளதாக கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வேம்பார் கடலோர காவல் படை போலீசார், பெரியசாமிபுரம் கடல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த லாரியை சோதனையிட்டனர்.