திருவனந்தபுரம்: கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உளவுத்துறை ஐஜியாக கோவையை சேர்ந்த டி.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் எஸ்.பி முதல் ஏடிஜிபி வரை ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனராக இருந்த ஸ்பர்ஜன் குமார் தென்பிராந்திய ஐஜியாக மாற்றப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த டி. பிரகாஷ் உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். 2004ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வான இவர் கோவையைச் சேர்ந்தவர் ஆவார். கொச்சி நகர கமிஷனராக இருந்த எச். நாகராஜு திருவனந்தபுரம் நகர கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.