புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறமுடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போராட முன்வர வேண்டும் என்று ஆளும் கட்சி அதிமுகவை சேர்ந்த வையாபுரி மணிகண்டன் சாடியுள்ளார் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து விவகாரத்தில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் மோதல் முற்றுகிறது. இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியை அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்த என்.ஆர்.காங்கிரஸ் லட்சுமி நாராயணன், உத்தியால்பேட்டையில் தொகுதி மக்களை திரட்டி மணிகண்டனுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.