கம்பம் : கம்பம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக அட்மா திட்டத்தின் கீழ் நெல் வயல்களில் நானோ யூரியா திரவம் இலை வழி தெளிப்பு செயல் விளக்கம் விவசாயிகள் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் நெற்பயிருக்கு தழைச்சத்து உள்ள திரவ யூரியாவை நேரடியாக உரமிடல் அல்லாமல் இலை வழி தெளிப்பு மூலம் வழங்கும்போது 1 ஏக்கர் நெற்பயிருக்கு பயன்படுத்தப்படும் ஒரு மூட்டை யூரியா என்ற அளவு குறைக்கப்பட்டு 500 மில்லி நானோ யூரியா திரவனம் பயன்படுத்தினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டது.