கொழும்பு: இலங்கையில் சிறுபான்மையினரான தமிழர்களின் நலன்களை பாதுகாக்க, அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண அந்நாட்டு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 10ம் தேதி பேசிய அதிபர் ரணில், ``நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதற்கு முன் தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்,’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், கொழும்பில் நேற்று முன்தினம் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.