திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் ஸ்பந்தனா நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும்-கூடுதல் எஸ்பி உத்தரவு

திருப்பதி : பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நடந்த ஸ்பந்தனா நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதி எஸ்பி  பரமேஸ்வர ரெட்டி உத்தரவின் பேரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஸ்பந்தனா’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கூடுதல் எஸ்பி விமலகுமாரி கலந்து கொண்டு பொதுமக்கள் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

 திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 47 புகார்தாரர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்து தங்களது குறைகளை தெரிவித்தனர். கூடுதல் எஸ்பி  கூறுகையில், மக்களின் பிரச்னைகளை சாதகமாக கேட்டறிந்து, ஒவ்வொரு வழக்குகளின் விவரங்களையும் தெரிந்து கொண்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து, மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். புகார்கள் அனைத்தும் சட்டப்படி விசாரிக்கப்பட்டு, புகார்தாரர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Related Stories: