கார் வெடிப்பு வழக்கில் கைதாகி கோவையில் இருந்த 6 பேர் புழல் சிறைக்கு மாற்றம்

கோவை: கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே காரில் இருந்து சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் (29) கருகி இருந்தார். இதுதொடர்பாக உக்கடம் ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது தல்கர் (25), முகமது அசாருதீன் (25),  முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (28),  முகமது நவாஸ் இஸ்மாயில் (26), வின்சென்ட் ரோட்டை சார்ந்த அப்சர்கான் (28) ஆகிய 6 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் 6 பேரும் நேற்று மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கார் வெடிப்பு தொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக வசதியாக இவர்கள் சென்னைக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது.

Related Stories: