திருவனந்தபுரம்: கேரள சட்டசபையின் 7வது கூட்டத்தொடர் இன்று (5ம்தேதி) தொடங்கியது. கடந்த கூட்டத்தொடர் வரை சபாநாயகராக இருந்த எம்.பி. ராஜேஷ் உள்ளாட்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தலச்சேரி தொகுதி சிபிஎம் எம்எல்ஏவான ஷம்சீர் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டார். புதிய சபாநாயகர் தலைமையில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. 9 நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் கேரளாவில் உள்ள 14 பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதாவை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானித்து உள்ளது.