பிரபல ரவுடி குண்டாசில் கைது

அண்ணாநகர்: பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி தீனா என்கிற தினகரன் (24). இவர் மீது விருகம்பாக்கம், அயனாவரம், அமைந்தகரை ஆகிய காவல் நிலையங்களில் 2 கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 30ம்தேதி அரும்பாக்கம் என்எஸ்கே நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (28) வுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை கத்தியால் குத்திவிட்டு தினகரன் தலைமறைவானார். புகாரின்படி, அமைந்தகரை போலீசார் வழக்குபதிவு செய்து ரவுடி தினகரனை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த நவம்பர் 10ம் தேதி அவரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவேண்டும் என்று ஆய்வாளர் கிருபாநிதி, அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமாருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, துணை ஆணையர் பரிந்துரையின்படி, சென்னை மாநகர கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்படி, ரவுடி தீனாவை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Related Stories: