தென்காசி : தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சபரி மலை சென்று வந்த ஐயப்ப பக்தர்கள் அருவியில் நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவும் குற்றாலம் அருவி உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.