மஞ்சு விரட்டில் மாடு முட்டி முதியவர் சாவு

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் ஆதினமிளகி அய்யனார், முத்து முனியய்யா கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 500க்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், மாடு முட்டி திருப்புத்தூர் அருகே மடைகரைப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (60) என்பவர் உயிரிழந்தார்.
மேலும், மாடு முட்டி 70 பேர் காயமடைந்தனர்.

The post மஞ்சு விரட்டில் மாடு முட்டி முதியவர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: