திருவனந்தபுரம்: சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் கடந்த 2018 ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பம்பையில் பெரும் சேதம் ஏற்பட்டது. இங்கு வாகனங்களை நிறுத்தும் இடங்களும் சேதமடைந்தன. இதனால் கடந்த சில வருடங்களாக பம்பையில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது வாகனங்களை பம்பையிலிருந்து சுமார் 21 கிமீ தொலைவிலுள்ள நிலக்கல்லில் தான் நிறுத்த வேண்டும்.