திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (நவம்பர் 30) வரை 9.25 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். நேற்று வரை 6.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் (28ம் தேதி) 84 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர். இதில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். இன்று (30ம் தேதி) வரை தரிசனத்திற்கு 9.25 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் நேற்று வரை 6.50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அதிகாலை நேரங்களிலும், மாலைக்குப் பின்னரும் தான் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.