திருவனந்தபுரம்: கேரளாவில் விழிஞ்சம் துறைமுக போராட்டத்தில் கைதானவர்கள் விடுவிக்க கோரி திருவனந்தபுரம் காவல் நிலையம் மீது மீனவர்கள் நடத்திய தாக்குதலில் 36 போலீசார் காயமடைந்தனர். திருவனந்தபுரம் அருகே அதானி குழுமத்தால் கட்டப்பட்டு வர கூடிய விழிஞ்சம் துறைமுகத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். துறைமுக திட்டத்தை கைவிடக் கோரி 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போராட்டம் தொடர்பாக பேராயர் மற்றும் 50 ஆயர்கள் உள்பட ஏராளமானவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.