கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆனந்தா போஸ் நேற்று பதவியேற்றார். மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுரான இருந்தவர் ஜெகதீப் தன்கர். இவருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு மட்டுமின்றி கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெகதீப் தன்கர் ஆளுநர் பதவியில் இருந்து விலகினார். இதன் காரணமாக இந்த மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக இல.கணேசன் நிர்வகித்து வந்தார்.