திருவனந்தபுரம்: கொச்சியில் கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை பின்தொடர்ந்து சென்று வாலிபர் தாக்க முயற்சித்த சம்பவம் குறித்து ஒன்றிய உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் மணிக்குமார். சென்னையை சேர்ந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் பைக்கில் சுமார் 4 கிமீ தூரம் பின்தொடர்ந்து வந்து, திடீரென தலைமை நீதிபதியின் காரை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டார். தலைமை நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரியையும் அவர் தாக்க முயன்றார்.