காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்த அரியலூர் வாலிபர் கைது; தாயும் சிக்கினார்  

ஜெயங்கொண்டம்: அரியலூர் அருகே காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் விநாயகம் (24). கேரளாவில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது 20 வயதான ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலானது. ஓராண்டாக காதலித்ததுடன் நெருங்கி பழகியதால் இளம்பெண் கர்ப்பமானார். இந்நிலையில், 4 மாத கர்ப்பிணி காதலியை விட்டு விட்டு விநாயகம் ஊருக்கு வந்து விட்டார். கடந்த 5 மாதத்துக்கு முன் விநாயகம், கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தகவல் தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

‘தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிந்தும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு, வேறு ஒரு பெண்ணை எப்படி திருமணம் செய்தீர்கள்’ என்று விநாயகத்திடம் காதலி கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘வீட்டில் உள்ளவர்கள் தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். இருப்பினும் உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன்’ என கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்நிலையில் விநாயகத்தின் காதலிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அவர் திருமணம் செய்யவில்லை. இதுகுறித்து நேற்று ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் காதலி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விநாயகம், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் தனலட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: