சென்னை: ஆவடி கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம் (44). இவர் திருமலைராஜபுரத்தில் கடந்த சில வருடங்களாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்டுடியோவை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். இதையடுத்து, நேற்று காலை வழக்கம்போல் ஸ்டுடியோவை திறக்க வந்தார். அப்போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.60,000 மதிப்புள்ள கேமரா, ரூ.10,000 மதிப்புள்ள ஹார்ட் டிஸ்க் கொள்ளை போனது தெரிய வந்தது.