கொல்கத்தா: டெல்லியில் பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் டிச.5ம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தல் பாஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றியணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் பேசிய மம்தா, ‘மாநிலங்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகைக்காக ஒன்றிய அரசிடம் பிச்சை எடுக்க வேண்டுமா? நிலுவை தொகையை உடனடியாக தரவிட்டால் ஜிஎஸ்டி செலுத்துவதை நிறுத்தி விடுவோம்,’ என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.