சண்டிகர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்தது. இந்நிலையில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், வேளாண் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் உயிரிழந்த 624 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.