பஞ்சாபி திரையுலகின் ‘ஹேமா மாலினி’நடிகை தல்ஜீத் கவுர் மரணம்

லூதியானா: பஞ்சாபி திரையுலகின் ‘ஹேம மாலினி’என்று அழைக்கப்படும் நடிகை தல்ஜீத் கவுர் காலமானார். பழம்பெரும் பஞ்சாபி நடிகர் தல்ஜீத் கவுர் (69) ராய்கோட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த தல்ஜீத் கவுர், திடீரென நேற்று காலமானார். ஆனால் இவரது மறைவுக்கான காரணங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை. அவரது மறைவுச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், நடிகர் நீரு பஜ்வா வெளியிட்ட பதிவில், ‘தல்ஜீத் கவுர் தற்போது நம்முடன் இல்லை.

உத்வேகத்துடன் செயல்பட்ட உங்களது (தல்ஜீத் கவுர்) மறைவு ஈடு செய்ய முடியாதது. உங்களுடன் நடித்ததற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல் பல்வேறு நடிகர்களும், ரசிகர்களும் நடிகையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பஞ்சாபி திரையுலகின் ‘ஹேம மாலினி’ என்று அழைக்கப்படும் தல்ஜீத் கவுர், ‘தாஜ்’, ‘கித்தா’, ‘புட் ஜட்டன் தே’, ‘ரூப் ஷாகினன் டா’, ‘இஷாக் நிமானா’, ‘லாஜோ’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: