செய்யாறு : செய்யாறில் இரண்டாவது நாளாக போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த தெரு நாய்கள் மற்றும் மாடுகளை நேற்று நகராட்சி பணியாளர்கள் பிடித்துள்ளனர்.
செய்யாறில் நகர மன்ற தலைவர் மோகனவேல், ஆணையாளர் ரகுராமன் ஆகியோரது உத்தரவின்பேரில் கன்னியம்மன் கோவில் தெரு, பாண்டியன் தெரு, சேரன் தெரு, எல்லப்பன் நகர், ஜீவா நகர், ஆற்காடு சாலை, புதிய காஞ்சிபுரம் சாலை, லோகநாதன் தெரு, அரசு மருத்துவமனை அருகில் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் நேற்று நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனராசன் தலைமையில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருந்த 40 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன.