சென்னை: விடுதலை போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 86வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. விடுதலை போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ.உ. சிதம்பரனாரின் 86வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை துறைமுகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ. சிதம்பரனாரின் படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன், சட்டப்பேரவை அமைச்சர் ரகுபதி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.