சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகாமை அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதவாக இருந்த 18 பேர் சென்னையில் இருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தமிழக காவல்துறைக்கு அனுப்பியது. அதன்படி கடந்த 10-ம் தேதி 4 பேரின் வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர்.