இடைப்பாடி: சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், இடைப்பாடி தாலுகாவை சுற்றியுள்ள ஏரி, குளங்கள் தொடர்ந்து நிரம்பி வழிகிறது. கொங்கணாபுரம் அடுத்த எருமைப்பட்டி ஊராட்சியில் 43 ஏக்கர் பரப்பளவில் உள்ள புது ஏரி 72 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பி உபரிநீர் வெளியேறியது. தொடர் மழையினால் வைகுந்தம், வெள்ளையம்பாளையம், மாங்குட்டபட்டி, பாலப்பட்டி, கொல்லப்பட்டி, கன்னந்தேரி ஆகிய ஏரிகள் நிரம்பிய நிலையில் நேற்று முன்தினம் இரவு கொங்கணாபுரம் புது ஏரியும் நிரம்பியது. இதனால், மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.