திருவண்ணாமலை; திருவண்ணாமலை அடுத்த மேல்படூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (34), விவசாயி. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளார். அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிரை, எலிகள் மற்றும் மயில்கள் நாசப்படுத்துவதால், எலிகளை கொல்லும் விஷத்தை நெல்லில் கலந்து வயல் வரப்புகளில் நேற்றுமுன்தினம் தூவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பார்த்தபோது அங்கு 5 பெண் மயில்கள் இறந்து கிடந்தன.