5 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அடுத்த மேல்படூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (34), விவசாயி. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளார். அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிரை, எலிகள் மற்றும் மயில்கள் நாசப்படுத்துவதால், எலிகளை கொல்லும் விஷத்தை நெல்லில் கலந்து வயல் வரப்புகளில் நேற்றுமுன்தினம் தூவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பார்த்தபோது அங்கு 5 பெண் மயில்கள் இறந்து கிடந்தன.

இதுதொடர்பாக திருவண்ணாமலை வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் சீனுவாசன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று இறந்து கிடந்த மயில்களை மீட்டனர். மேலும், விவசாயி சீனிவாசனை கைது செய்தனர். அவரை  மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: