புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சிபிஐ.யின் நடவடிக்கையால் அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வரும் முயற்சியில் சிபிஐ ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான முதல் வழக்கில், நீரவை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மேல்முறையீடு செய்தார். அதில், அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பதாகவும், அதனால் அவரை நாடு கடத்தக் கூடாது என்றும் அவருடைய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.