ஐதராபாத்: அர்ஜுன் தன்னை அவமதிப்பதாக இளம் தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் புகார் கூறியுள்ளார். நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த படத்தை தயாரித்து, அர்ஜுன் இயக்குகிறார். இதில் ஹீரோவாக நடிக்க விஷ்வக் சென் என்பவரை தேர்வு செய்தார். ஆனால் படப்பிடிப்புக்கு விஷ்வக் சென் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், ‘விஷ்வக் சென்னிடம் அர்ப்பணிப்பு குணம் இல்லை. அவர் படப்பிடிப்புக்கு வராமல் ஏமாற்றி விட்டார். அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க சம்மதித்தேன். ஆனால் அவர் சரியாக நடக்கவில்லை. இனி 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருடன் பணியாற்ற மாட்டேன்’ என அர்ஜுன் கோபமாக கூறினார். இது பற்றி விஷ்வக் சென் பதிலளித்துள்ளார்.