இந்தியா-ஆஸ்திரேலியா பைனலில் மோதும்: ரிக்கிபாண்டிங் கணிப்பு

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் அளித்துள்ள பேட்டி: உண்மையைச் சொல்வதென்றால் மெல்போர்ன் மைதானத்தில் யார் இறுதிப் போட்டி விளையாடுவார்கள் என கணிப்பது கடினம். ஆஸ்திரேலியா அணி தனது குழுவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் என்று நான் நம்புகிறேன். தென் ஆப்பிரிக்கா அணி தற்போது பலமான அணியாக இருக்கிறது. ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்திய அணிகள் தான் மோதும்.

நான் கேப்டனாக இருந்த பொழுது எல்லா பெரிய போட்டிகளிலும், எங்கள் வீரர்களிடம் ஆட்டத்தில் கிடைக்கும் அந்த தருணங்களை தவறவிடாதீர்கள். அதை தழுவி கொள்ளுங்கள். இது இன்னொரு ஆட்டம் கிடையாது. இது மிக முக்கியமான பெரிய போட்டி என்றுதான் கூறுவேன். பெரிய போட்டி என்று நாமும் உணர வேண்டும் மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டும் அதற்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும், என்றார்.

Related Stories: