சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் அளித்துள்ள பேட்டி: உண்மையைச் சொல்வதென்றால் மெல்போர்ன் மைதானத்தில் யார் இறுதிப் போட்டி விளையாடுவார்கள் என கணிப்பது கடினம். ஆஸ்திரேலியா அணி தனது குழுவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் என்று நான் நம்புகிறேன். தென் ஆப்பிரிக்கா அணி தற்போது பலமான அணியாக இருக்கிறது. ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்திய அணிகள் தான் மோதும்.