திருமலை: ஆந்திராவில் விவசாய பணிக்காக சென்றபோது டிராக்டர் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்காஹொன்னூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் விவசாய வேலைக்காக நேற்று டிராக்டரில் சென்றனர். அப்போது, சாலை மீது இருக்கும் உயர் அழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து டிராக்டர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி, பால்தூரு பார்வதி, சங்கரம்மா, வண்ணம்மா, ரத்தினம்மா ஆகிய பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.