கோத்தகிரி: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக அங்குள்ள பங்களாவில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு டிஜிபி நேரில் ஆய்வு நடத்தினார். கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதையடுத்து சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் விசாரணையை துவக்கியுள்ளார். அவர் நேற்று கொடநாடு எஸ்டேட் பங்களாவிற்கு வந்தார். அங்கு மதியம் 2.30 மணி அளவில் சென்ற அவர், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் ஜெயலலிதாவின் அறை, சசிகலாவின் அறை, காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட இடம் ஆகிய இடங்களை பார்வையிட்டார். மேலும் அந்த இடங்களை சிபிசிஐடி அதிகாரிகள் புகைப்படமும் எடுத்தனர்.