நவ. 3ம் தேதி மம்தா பானர்ஜி சென்னை வருகை

கொல்கத்தா: சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க நவ.3ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக உள்ள இல.கணேசன் மகனின் பிறந்தநாள் விழா நவம்பர் 3ம் தேதி ெசன்னையில் உள்ள ஆளுநரின் வீட்டில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் இல.கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். இதனால், முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேபோல் மூத்த அரசியல் தலைவர்கள் பலருக்கும் இல.கணேசன் மகனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: