சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசு அமைத்த ஆணையத்தின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கை வெளியிடப்பட்டு ஆறு நாட்களாகியும் எடப்பாடி வாய் திறக்காமல் மவுன விரதம் இருக்கிறார். 100 நாட்களாக நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தை அமைதி வழியில் தீர்வு காணாமல் துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உள்பட 13 பேரை சுட்டுக் கொன்றது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதுபற்றி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காக்கிறார்.