வெப்ப அலை வீசுவதால் கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைப்பு: பாமக தலைமை அறிவிப்பு


சென்னை: வெப்ப அலை வீசுவதால் பாமக இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று பாமக தலைமை அறிவித்துள்ளது. பாமக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக இளைஞர் அணி, மாணவர் அணி, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆகிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த கலந்தாய்வுக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்தக் கூட்டங்கள் எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

The post வெப்ப அலை வீசுவதால் கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைப்பு: பாமக தலைமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: