அதனால் பாஜக கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாக கூறி உஸ்மான் கனியின் மீது மாநில பாஜக தலைவர் ஓங்கர் சிங் நடவடிக்கை எடுத்துள்ளார். அதானது பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உஸ்மான் கனி ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மாநிலத்தின் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி, உஸ்மான் கனியை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக உஸ்மான் கனி கூறுகையில், ‘ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சை நானும் கேட்டேன். ஒரு முஸ்லீம் என்ற முறையில் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மோடியின் கருத்துகளால் ராஜஸ்தானில் பாஜக பின்னடைவை சந்திக்கும்’ என்றார்.
The post மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக நிர்வாகி கைது: கட்சியில் இருந்தும் நீக்கம் appeared first on Dinakaran.