சென்னை: தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதையொட்டி அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சார்பாக சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர், மோர், ஐஸ்கிரீம், பழங்கள், இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஓபிஎஸ் அளித்த பேட்டி: தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு அறிவுறுத்தியதன்படி கோடைகாலத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வருகிறோம். ராமநாதபுரத்தில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக மீண்டும் 3வது முறையாக பிரதமராக மோடி வருவார். பிரதமர் மோடி வெறுப்பு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் என காங்கிரஸ் குற்றம்சாட்டும் நிலையில், பிரசாரத்தில் பிரதமர் மோடி சரியாகத்தான் பேசி வருகிறார் எனத் தெரிவித்தார்.
The post பிரதமர் மோடி பிரசாரத்தில் சரியாகத்தான் பேசுகிறார்: ஓபிஎஸ்சே சொல்லிட்டார் appeared first on Dinakaran.