ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, கடந்த 2005ம் ஆண்டு முதல் குப்காரில் உள்ள பேர்வியூ அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இது, அப்போது முதல்வராக இருந்த மெகபூபாவின் தந்தை முப்தி முகமது சயீத்துக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது முதல் மெகபூபா இங்கு வசித்து வருகிறார். இந்நிலையில், இந்த பங்களாவை காலி செய்து ஒப்படைக்கும்படி மெகபூபாவுக்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.