ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் இன்று அதிகாலை தீவிரவாதிகளால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் ஹார்மென் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சிலர், இன்று அதிகாலை கையெறி குண்டுகளை வீசியதில் இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘தடைசெய்யப்பட்ட அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் உள்ளூர் தீவிரவாதிகள் சிலர், ஹார்மென் பகுதியில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கையெறி குண்டுகளை வீசினர்.