மதுரை: தீபாவளி பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டம் மேலூர் கால்நடை சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்று இருக்கலாம் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலூர் சந்தை பேட்டையில் உள்ள கால்நடை சந்தை வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் கூடுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி ஏராளமான கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். விதவிதமான ஆடு, கோழிகளுடன் பல்வேறு ஊர்களை சேர்ந்த வியாபாரிகளும் அதிகளவில் கூடியதால் சந்தை களைகட்டியது.