திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில் வசிக்கும் சிலர் மோட்டார் சைக்கிளில் ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள சிவாடா பஸ் நிறுத்தம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.