ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திவீரம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னதம்பி (47), கூலி தொழிலாளி. இவரது 18 வயது மகள், ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்த மாணவி, திடீரென எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது, அந்த மாணவி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. , நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, மாணவியின் தந்தை சின்னதம்பி, சாமல்பட்டி காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், அத்திவீரம்பட்டியை சேர்ந்த புஷ்பராஜ் (58), அவரது மகன் வேலு (36) ஆகியோர், எனது மகளை பலாத்காரம் செய்துள்ளனர். அதனால் மகள் கர்ப்பமானார்.இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.