குமாரபுரம்: தக்கலை அருகே வில்லுகுறி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் ராஜ் (வயது 42). டிரைவர். வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். ஜெகன் ராஜ் நேற்று முன்தினம் அவருக்கு சொந்தமான டெம்போ எடுத்து சென்று திருநெல்வேலி பகுதியில் இருந்து வைக்கோல் லோடு ஏத்தி களியக்காவிளைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு நேரமானதால் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் புலியூர்குறிச்சி அழகர் அம்மன் கோயில் பகுதியில் ரோட்டின் கரையோரம் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை 3 மணி அளவில் அவரது உறவினரிடம் இருந்து செல்போன் மணி அழைத்தது.